என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இடிந்து விழுந்தது"
- வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுவதை பார்த்தவுடன் 2 குழந்தைகளையும் தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்து விட்டனர்.
- இதனால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பினர்.
அந்தியூர்:
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பொழிந்தது. அந்தியூர் அருகே உள்ள அண்ணமார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (36). செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு வேலுமணி அவரது 2 குழந்தைகள் மற்றும் மனைவி நித்தியா ஆகியோர் மழையின் போது வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 11 மணி அளவில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. விழும் சத்தம் கேட்டு அலறி அடித்து கொண்டு கணவன், மனைவி இருவரும் எழுந்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுவதை பார்த்தவுடன் 2 குழந்தைகளையும் தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்து விட்டனர். இதனை தொடர்ந்து பக்கத்து வீடான அவரது நண்பர் குணசேகர் என்பவரது வீட்டில் இரவு முழுவதும் 4 பேரும் தங்கினர். இதனால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து சின்னத்தம்பி பாளையம் ஊராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தவசியப்பன், ஊராட்சி செயலாளர் கேசவன் (பொறுப்பு ) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
- தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை
- பெண் ஒருவர் நடந்து சென்றார்.
ஊட்டி :
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 5 நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் கூடலூர் அத்திப்பள்ளி சாலையில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அந்தப் பெண் நடந்து சென்ற ஒரு சில மணி நொடியில் ஆற்றின் தடுப்பு சுவர் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் பிழைத்தார். தொடர்ந்து லேசான காற்றுடன் கூடலூர், பந்தலூர் பகுதியில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வாகனங்களை மரத்தின்கீழ் நிறுத்த கூடாது என தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்